Sunday, 28 May 2017

இது சரியா பெண்ணே !

No automatic alt text available.

மகிழ்வின் இராகத்தை 
இசைகூட்டிச் சுரம் கூட்ட 
விரல்களின் வித்தையில் 
வீணையின் தந்திகள் அதிர 
நர்த்தனமாடும் 
சந்தோச நீர்மைக் குளியலின் ஊடே 
அதிர்ந்த நரம்புகளின் 
நரம்புகள் புடைத்து.. 
சிலீரென்றறுந்துத் தன் உயிர் மாய்க்க 
மரிக்கும்முன் 
தெரித்து வீழ்ந்த அக் கம்பி 
மீட்டியவன் விழிப்பாவை உரசி 
உதிரம் மீட்டி நகரும் வேளையில் 
மகிழ்வின் இராகம் மடங்கி 
சோகத்தின் இராகத்தை 
உச்சம் தொட்டு அலறியது போல் 
காதலின் மகிழ்வை மாய்த்தே... 
நீ கொடுக்கிறாய்ப் பெண்ணே... 
உன் திருமண அழைப்பிதழ்! 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts