சித்தார்த்த கெளதமனின்
சிந்தையைத் தூண்டிச் சென்ற
மூப்புக் கிழவனும்
முகவரியில்லாப் பிணமும்
சாக்காட்டை நோக்கும் நோயானும்
மட்டுமில்லாமல்

நோக்காடுக் கொடுக்கும் நோவினையாய்
யசோதரையும், ராகுலனும்
பாடம் சொன்ன யாழ்க்காரனும்
தாகம் தீர்த்தச் சுமேதையும்
கூடவேதான் சுற்றித் திரிகிறார்கள்...
யாரும் பார்க்காமல்!
- மு.முகமது பாட்சா
சிந்தையைத் தூண்டிச் சென்ற
மூப்புக் கிழவனும்
முகவரியில்லாப் பிணமும்
சாக்காட்டை நோக்கும் நோயானும்
மட்டுமில்லாமல்

நோக்காடுக் கொடுக்கும் நோவினையாய்
யசோதரையும், ராகுலனும்
பாடம் சொன்ன யாழ்க்காரனும்
தாகம் தீர்த்தச் சுமேதையும்
கூடவேதான் சுற்றித் திரிகிறார்கள்...
யாரும் பார்க்காமல்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment