
அடக்ககுழிகளை
காத்து நிற்பதில்லை
நினைவுச் சின்னங்கள்!
காதலின் சின்னமாய்
தாஜ்மெஹல்!
அவளுக்கும்
அங்கு வியர்த்தால்
குளிர்ந்தக் காற்றை
யார்
கடத்தித் தரப் போகிறார்கள்?
கேள்விக் கணக்கின்
விடைகளுக்கு
ஷாஜஹான்
பகரம் வந்து
நிற்கப் போவதில்லை!
மீசானின் தராசில்
காதல் மட்டுமே
தட்டுகளைச் சமன் செய்து விடுமா?
மகஷரின் மைதானத்தில்
அவனுக்கும் அவளுக்குமான
இடைவெளித் தூரத்தை
யார் நின்று நிரப்பக்கூடும்?
சின்னமாய் மட்டுமே
நிமிர்ந்து நிற்கிறது தாஜ் மெஹல்!
அடக்ககுழிகளின்
வியர்வைத் துளிகளை
உள் வாங்கிக் கொண்டு!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment