Friday, 26 May 2017

இறைவன் யார் ?



தொடர்புடைய படம்

அவரொரு முல்லாவாகவும் இருக்கலாம் 
அல்லது சூஃபியாகவும் இருக்கலாம், 
தஸ்பிகளை மெதுவாகத்தான் 
உருட்டிக் கொண்டிருந்தார், 
வெயிலின் உக்கிரத்தை 
கம்பளியாடைக்குள் புதைத்திருந்தவரை.. 
புழுங்கவில்லையா ? என்று கேட்டேன் 
இறைவன் குளிராகவே இருக்கிறான் என்றார், 
இறைவனைக் காட்டமுடியுமா? எனக் கேட்டேன் 
அவனை நீ பார்த்திருக்கிறாயா ? என்றார் 
இல்லையென்றேன். 
சிரித்துவிட்டு அவன்தான் இறைவனென்றார், 
கண்களுக்குத் தெரிந்துவிட்டால் 
மனிதனென்றார்... 
கஷ்டங்களென்பது தேவையாயென்றேன், 
இல்லையென்றால் 
இன்பங்களை நீ நுகரமாட்டாய் என்றார்... 
நீங்கள் ஞானியா என்றேன் 
நான் ஞானியென்றால் 
இறைவன் யாரென்றக் கேள்வியை வைத்துவிட்டு 
நகர்ந்துவிட்டார் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts