
அவரொரு முல்லாவாகவும் இருக்கலாம்
அல்லது சூஃபியாகவும் இருக்கலாம்,
தஸ்பிகளை மெதுவாகத்தான்
உருட்டிக் கொண்டிருந்தார்,
வெயிலின் உக்கிரத்தை
கம்பளியாடைக்குள் புதைத்திருந்தவரை..
புழுங்கவில்லையா ? என்று கேட்டேன்
இறைவன் குளிராகவே இருக்கிறான் என்றார்,
இறைவனைக் காட்டமுடியுமா? எனக் கேட்டேன்
அவனை நீ பார்த்திருக்கிறாயா ? என்றார்
இல்லையென்றேன்.
சிரித்துவிட்டு அவன்தான் இறைவனென்றார்,
கண்களுக்குத் தெரிந்துவிட்டால்
மனிதனென்றார்...
கஷ்டங்களென்பது தேவையாயென்றேன்,
இல்லையென்றால்
இன்பங்களை நீ நுகரமாட்டாய் என்றார்...
நீங்கள் ஞானியா என்றேன்
நான் ஞானியென்றால்
இறைவன் யாரென்றக் கேள்வியை வைத்துவிட்டு
நகர்ந்துவிட்டார் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment