வேதனைச் சிறைகளுக்குள்
காயப் பட்டிருக்கும்
மலர்களின் மெளனத்தை
அழகு யென்று
சொல்லிவிட்டு நகர்கிறோம்,
பூக்களின் மேல் பூத்திருப்பது
பனித் துளிகளாகத்தான்
இருக்க வேண்டுமென்பது
கட்டாயமில்லை...
கண்ணீர்த் துளிகளாகவும்
இருக்கலாம்,
காயப்படுத்தாத வரையில்தான்
முட்களும்
காவலுக்கு இருக்கின்றன!
சுவை தேன்
சுவைத்தேன் யென்று
நகர்வது மட்டுமே
வண்டுகளுக்கும்
வேலையாக இருக்கின்றன,
பூக்கள் மென்மையானது
என்பதால்தான்
கசக்கியெறிவதொன்றும்
அத்தனை
கடினமாகத் தெரியவில்லை,
ஆசையோடு நுகர்ந்த பூக்கள்
வாடியபின்
வீதியில்தான் வீசியெறியப்படுகின்றன,
கடவுள்களும் கண்டு கொள்வதில்லை...
வாடியப் பூக்களை!
பூக்கள் யென்றால்
இங்கு பூக்கள் மட்டுமேயில்லை
பெண்களும்தான்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment