இரத்தக் களரியில்
உதிரம் குடித்து நிற்கும்
கோணாய்க் கூட்டத்தில்...
சமாதானம் பேச
வைரிகளின் தலைவன்
வெண் கோடியேந்தி
வருகிறானாம்! - மிருகாரி
விருந்துக்கு அழைத்திருக்கிறான்...
சிறுத்தைகளின் துணையோடு!
மான் கறி விருந்திற்கு
நரிதான் சமையல்காரன்!
கூட்டத்தைக் கூட்டிக் காட்ட
குரங்கன்தான் பொறுப்பு!
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும்
இலவசமாய்
புல்லுக் கட்டு வினியோகம்!
ஓ நாய்கள்
பல் துலக்குகின்றன...
அடுத்த ஒரு விருந்திற்கு!
- மு.முகமது பாட்சா
உதிரம் குடித்து நிற்கும்
கோணாய்க் கூட்டத்தில்...
சமாதானம் பேச
வைரிகளின் தலைவன்
வெண் கோடியேந்தி
வருகிறானாம்! - மிருகாரி
விருந்துக்கு அழைத்திருக்கிறான்... சிறுத்தைகளின் துணையோடு!
மான் கறி விருந்திற்கு
நரிதான் சமையல்காரன்!
கூட்டத்தைக் கூட்டிக் காட்ட
குரங்கன்தான் பொறுப்பு!
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும்
இலவசமாய்
புல்லுக் கட்டு வினியோகம்!
ஓ நாய்கள்
பல் துலக்குகின்றன...
அடுத்த ஒரு விருந்திற்கு!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment