Tuesday, 30 May 2017

காத்திருக்கிறாள்



முத்துக் குளிக்கப் போனவன் 
மூழ்கி விட்டதாகத் தான் சொல்கிறார்கள்! 
மூன்றாம் சாமத்தில் 
ஒரு பெண்ணோடு அமிழ்ந்ததாய் 
பார்க்காதவன் சொல்லிவிட்டுப் போகிறான்! 
பிணம் வருமென்றே பாத்திருக்கிறாயா? 
யென்று ஞொள் விதைத்து ஒருவன்! 
சுறாக்களின் செரிமானத்தில் 
மொத்தமாய்ச் சிதைந்திருப்பானோ! ? 
பாவம் பொம்மாயி... 
புதுப் புருசனை, இனி தேடவேண்டும்! 
காத்தானின் கட்டுமரக் கட்டுவலைக்குள் 
கட்டாயம் சிக்கிக் கொள்வாள்... 
துடுப்புப் போட்டவனுக்குத் தொடுப்பு ஒன்றும் 
புதுசல்ல! 
கட்டுக்காரிதான் இவளும்... 
கட்டாயம் இவள் வலையில்தான் 
கட்டுமரங்கள் சிக்கிக் கொள்ளும் ! 
காரியம் முடியட்டும் 
கச்சிதமாய் நாமும் கணக்குப் போடுவோம்! 
சுற்றிச் சிதறும் வார்த்தைகளின் வலையில் 
இன்னமும் சிக்கிக் கொள்ளாமல்தான் இருக்கிறாள் 
பொம்மாயி! 
கட்டாயம் வருவான்.... 
முத்துக் குளிப்பவன் மூழ்கிப் போகமாட்டான் 
யென்ற நம்பிக்கையோடு! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts