முகம் பார்க்கும் கண்ணாடி
முகம் பார்ப்பதில்லை !
௦ ௦ ௦
கையில் கரைப் படிந்தது...
வாக்களித்து விட்டேன்!
௦ ௦ ௦
விழிகளில் காட்டும் வெட்கத்தை
கால் விரல்களில் காட்டுகிறாய்!
0 0 0
கோபத்தை
கழற்றி வைத்துப் பார்க்கிறேன்...
நிழல் தருகிறது போதிமரம்!
0 0 0
மரணத்தை
சுமந்தே திரிகிறது தேகம்...
அடங்காத ஆசைகளோடு!
. ௦ ௦ ௦
' ம் ' யென்ற ஒற்றை வார்த்தையில்
ஒளிந்து கொள்கிறாய்!
பார்வைகள் அதிகம் பேசுகிறது!
௦ ௦ ௦
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment