Saturday, 6 May 2017

சின்ன மழை


சின்ன மழை க்கான பட முடிவு

காதலில்லா உலகம்
கவிதையிழந்து தவிக்கும்



காற்றைப் பிடித்து
கடலில் கரைக்கிறேன்
கவிதையொன்றை
கடத்துவதற்காக ...



அம்மாயென்ற
ஒற்றைச் சொல்லில்தான்
உயிர் இருக்கிறது (அ)
மெய் இருக்கிறது  (ம்)
உயிர்மெய்யும் இருக்கிறது (மா)



முகம் காட்டும் கண்ணாடி
முகம் பார்ப்பதில்லை



ஒன்றாகக் குவிந்து 
மெல்ல விரல் நழுவி 
ஒன்று மில்லாததென 
ஆன பிறகே உணர்கிறோம் 
நாமும் 
ஒன்றுமில்லாத ஒன்றென்று! 

0

- மு.முகமது பாட்சா


No comments:

Post a Comment

Popular Posts