புரிதலே இல்லாமல்
ஒற்றைப் புள்ளி நின்று கொண்டு
நான் தான் புரிதல் என்கிறது?
ஓவியனின் தூரிகையின் சிதறல்கள்
ஓவியமாய்
இருந்தாலும் துடைக்கப் படும்!
பிக்காஸோவை
புரியாமல் வாங்கிச் செல்கிறான்
சுவற்றில் மாட்டி வைக்க?
அவன் தேவையாகப் பிக்காஸோ!
.
வார்த்தைகளை ஒட்டவும்
வெட்டவும் கற்று வைத்திருக்கிறான்
மரபைச் சாய்த்தவன்
காதலுக்குள் சிக்கிக் கொண்ட மகளை
வெட்டிவிடுவதாய்ப் பயம் காட்டி!
நவினம் ஏற்காமல் நகர்கிறது
அந்த ஒற்றைப் புள்ளி
அ
து
நீயாகவும் இருக்கலாம்!
நானாகவும் இருக்கலாம்!
.
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment