Monday, 29 May 2017

இனியுமா?

Related image

சுவர்களின் விரிசல்களை 
பூசிக் கொண்டுதான் இருக்கிறோம், 
அதனுள்ளிருந்து 
யாரோ உடைத்துக் கொண்டும் இருக்கிறார்கள், 
உடைசல்களின் விரிசல்களில் வழியும் 
கதறல்களை 
தேசிய கீதமென்றே மொழி பெயர்க்கிறார்கள், 
எங்களின் உணவுத் தட்டுகளையும் 
பறித்துக் கொண்டவர்கள் 
அடையாளத்தைச் சுமந்து சென்றால் 
குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்துகிறார்கள்... 
கேள்விகள் கேட்பது 
தேசிய குற்றமாகிப் போனது... 
விழிகளை மூடி உறங்கிக் கிடந்தால் 
குழிகளில் இறக்கிவிடும் அபாயமுண்டு... 
தேசிய உணர்விலிருந்த ஆச்சரியக் குறி 
மெல்லக் குனிந்து 
கேள்விக் குறியாக மாறிப் போனது, 
வட நாட்டு நாய்களின் இறைச்சிப் பசிக்கு 
இனியும் நாங்களேன் 
குனிந்து குண்டியைக் காட்ட வேண்டும் ? 
வீட்டுக்கொரு விளக்குமாறு எடுத்தாலே போதும் 
நாய்களையெல்லாம் விரட்டிச் சாகடிக்க ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts