Sunday, 21 May 2017

நிமிரும் கேள்விகள்

ask to question painting க்கான பட முடிவு

இந்த உலகம்தான் 
மிகவும் முக்கியமென்கிறாய், 
பிறகேன் அஃது 
இரத்த வண்ணம் பூசிக் கொள்கிறது? 

யாருக்காக இவர்கள் 
இங்கே அடித்துக் கொள்கிறார்கள் ? 

நமக்காகத்தானென்றால் 
நாம் இன்னமும் 
ஏழைகளாகத்தானே இருக்கிறோம் , 

இடுகாடுகள் ஏன் 
இன்னமும் பிரிந்தே கிடக்கின்றன? 

அழுகும் பிணங்களுக்கேன் 
ஆசைகள் அதிகமாகிப் போனது? 

கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லையா? 

தெரியாது ! 

கேள்விகள் கேட்க 
உன்னை அவர்கள் அனுமதிக்கவேயில்லை 

அதனால்தான் 
அவர்கள் ஆச்சரியக் குறிகளாகவே 
உன்னெதிரில் நிமிர்ந்து நிற்கிறார்கள், 

இந்த உலகம்தான் 
மிகவும் முக்கியமென்றால், 
இனி கேள்விகளால்தான் நாம் 
நிமிர்ந்து நிற்கவேண்டும், 

இல்லையென்றால் 
இந்த உலகம் எப்படி முக்கியமாகும் ? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts