புரியாத வார்த்தைகளை
உடைத்துப் போட்டு
நானும் கவிஞன் என்றான்
மரபுதான் முடங்கிப் போனது
பொருளாவது உண்டா? என்றேன்
கவிதைக்கு அது
தேவையே இல்லையென்றான்
நீ..கவிஞனேயில்லை என்றேன்
அவன்
சிரித்து விட்டுச் சொன்னான்
".... இதழின் ஆசிரியர்
என் மனைவியின் அப்பாதானென்று"
அப்படியென்றால்
அவன் நிச்சயமாகக் கவிஞன்தான் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment