Sunday, 28 May 2017

சில்லரைக் காசுகள்


கூட்டுப்புழு க்கான பட முடிவு

பட்டாம் பூச்சிகளுக்கும்
சிறகு முளைத்த பிறகு
புழுவாய் இருந்தது
மறந்துப்போகிறது!

சிலந்தியின் வலையில்
சிக்கிய பூச்சிக்கும்
பிழைத்துக் கொள்வோம்
என்ற; நம்பிக்கையிருந்தால்
வலையை சிதைத்து
பிழைத்துச்செல்லும்!

நட்பை மறந்தவனும்
நன்றியை மறந்தவனும்
கொலைக் காரர்கள்தான்!

*உயிர் போன 
உடலைப் பார்த்து
அழும் உறவுகள்
சவத்தின் உடமைகளுக்காக
அடித்துக் கொள்கின்றன!
"அட...நாளைப் போகும்
சவங்களே!"

*விலை மகள்களின் மார்பில் 
பதுங்கிய காசுகளும்
கோயில் உண்டியல்களில்
புகலிடம் தேடுகின்றன!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts