பட்டாம் பூச்சிகளுக்கும்
சிறகு முளைத்த பிறகு
புழுவாய் இருந்தது
மறந்துப்போகிறது!
சிலந்தியின் வலையில்
சிக்கிய பூச்சிக்கும்
பிழைத்துக் கொள்வோம்
என்ற; நம்பிக்கையிருந்தால்
வலையை சிதைத்து
பிழைத்துச்செல்லும்!
நட்பை மறந்தவனும்
நன்றியை மறந்தவனும்
கொலைக் காரர்கள்தான்!
*உயிர் போன
உடலைப் பார்த்து
அழும் உறவுகள்
சவத்தின் உடமைகளுக்காக
அடித்துக் கொள்கின்றன!
"அட...நாளைப் போகும்
சவங்களே!"
*விலை மகள்களின் மார்பில்
பதுங்கிய காசுகளும்
கோயில் உண்டியல்களில்
புகலிடம் தேடுகின்றன!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment