இல்லாதவிடத்தில் தேடிய
முல்லாவிற்கு மட்டுமே தெரியும்
தேடுகின்ற எதுவுமே
நாம் எடுத்துச் செல்வதில்லையென்று,
கோடு போட்டு வாழ்பவன்
கோடுகளை நகர்த்துகிறான்...
ஆடையோடு எவனாவது -தன்
அன்னை வயிற்றில் பிறக்கின்றானா?
கோழைச்சளி சூழ்ந்த உடல்
நாற்றமெடுத்த பிண்டம்தானே !
பாடுபட்ட சேர்த்தவெதுவும்
பல்லாங்குழிகளில் தங்குவதில்லை...
நாவின் ருசிக்கும்
ஆசையின் சுவைக்கும்
தூரமொன்றும் அதிகமில்லை.
அடுத்தொரு ஆசை விழித்துக் கொண்டால்
அம்மணமாய்க் கிடக்கும் உடல் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment