
வளர்பிறைக் கண்டதும்
முகம் பௌர்ணமியானது,
வளம்மிகுப் பாங்கோசை
காதின் வாசலில் நின்றது,
எழில்தரும் வனப்பாய்
பள்ளி வாசலும் நிமிர்ந்தது,
முகம்மதின் மொழியாய்
தொழுகையும் நிறைந்தது,
நோன்பின் மேன்மையால்
வாய்மையும் துளிர்த்தது,
ஈகையின் மொழியால்
உள்ளம் தேனாய் இனித்தது,
பொய்மையின் முகத்தில்
பெருந் தீயும் சூழ்ந்தது,
நட்பினப் பெருமையால்
மொஹபத்தும் வளர்ந்தது...
வாழ்த்துகள் புனித ரமலானே
வருகவே நல் இளம்பிறையே !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment