Thursday, 25 May 2017

கஸலாய் காதல்

Image may contain: one or more people

என்ன மாயம் செய்தாய் நெஞ்சம் வாட 
காதல்தீயை அள்ளி நானும் சூட , 

போதைக் கொண்ட நெஞ்சம் தடுமாற 
பூக்கள் கூட வாடும் உன்னைப் பாட, 

சோகம் நெஞ்சில் ராகம் கோர்த்துப் பாட 
மௌனம்தானா நீயுமெடுத்தாய்ச் சூட, 

வார்த்தையொன்றைச் சொல்லிவிட்டாய் வாட 
வாழ்க்கையென்றச் சூறைக் காற்றில் சாய, 

காதலென்ற மாயைக் கண்டும் கண்மூட 
காற்றும் கூடக் கருணைக் காட்டும் சாக.

- முகமதுபாட்சா

No comments:

Post a Comment

Popular Posts