என் கைகளைக் கட்டும் வரை
பார்த்துக் கொண்டிருந்தேன்
என் ஆடைகளைக் கழற்றிய போது
அவர்களைக் கவனிக்கவில்லை
என் நிழலை மிதித்து நின்றவர்கள்
என்னை நிர்வாணமாக்கி
புணர்ந்ததை உணராமல்
வர்க்கப் போராட்டத்திற்குள் நுழைந்து
வசனங்கள் பேசிக் கொண்டிருந்தேன்
ஆதாரோடு களவாடப்பட்டதை அறியாமல்
பகுத்தறிவுப் பேசியவன்
பாழும் கிணற்றுக்குள் மெல்ல நழுவுகிறேன்
சாதியத் தூர்களில் சிக்கி சீரழியும் முன்பாக
ஓர் ஒற்றை வார்த்தைப் பிடித்து
ஏறிவரவேண்டும்
புரட்சி
-மு.முகமது பாட்சா
பார்த்துக் கொண்டிருந்தேன்
என் ஆடைகளைக் கழற்றிய போது
அவர்களைக் கவனிக்கவில்லை என் நிழலை மிதித்து நின்றவர்கள்
என்னை நிர்வாணமாக்கி
புணர்ந்ததை உணராமல்
வர்க்கப் போராட்டத்திற்குள் நுழைந்து
வசனங்கள் பேசிக் கொண்டிருந்தேன்
ஆதாரோடு களவாடப்பட்டதை அறியாமல்
பகுத்தறிவுப் பேசியவன்
பாழும் கிணற்றுக்குள் மெல்ல நழுவுகிறேன்
சாதியத் தூர்களில் சிக்கி சீரழியும் முன்பாக
ஓர் ஒற்றை வார்த்தைப் பிடித்து
ஏறிவரவேண்டும்
புரட்சி
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment