கல்வி என்பது
காணாமல் போய்விட்டது!
யார் அதை..
கண்டுபிடிப்பது?
வியாபாரப் பொருளாக
விலை
வைத்தாகிவிட்டது,
காசை பிடுங்கும்
கூட்டத்திடம்
வசமாய் மாட்டிக் கொண்டது
அரசுப் பள்ளிகள்
அனாதை இல்லங்களாயின
வீணை வைத்திருந்த
கலை மகளின் கைகளில்
விலங்கை மாட்டி விட்டு;
சரஸ்வதிக்கு
பூசை செய்கிறார்கள்,
அறிவை சுமக்க வேண்டிய
குழந்தைகளின் முதுகில்
புத்தகச் சுமைகள்
கல்விக் கூடங்களின்
அருகில்தான்
மதுக் கடைகளின் ராஜ்ஜியம்
கண்ணீர் வடிக்கிறாள்
கலை மகள்...
காணாமல் போன கல்வியை
யார் கண்டுபிடிப்பதென்று !
- மு.முகமது பாட்சா
காணாமல் போய்விட்டது!
யார் அதை..
கண்டுபிடிப்பது?
வியாபாரப் பொருளாக
விலை
வைத்தாகிவிட்டது,
காசை பிடுங்கும்
கூட்டத்திடம்
வசமாய் மாட்டிக் கொண்டது
அரசுப் பள்ளிகள்
அனாதை இல்லங்களாயின
வீணை வைத்திருந்த
கலை மகளின் கைகளில்
விலங்கை மாட்டி விட்டு;
சரஸ்வதிக்கு
பூசை செய்கிறார்கள்,
அறிவை சுமக்க வேண்டிய
குழந்தைகளின் முதுகில்
புத்தகச் சுமைகள்
கல்விக் கூடங்களின்
அருகில்தான்
மதுக் கடைகளின் ராஜ்ஜியம்
கண்ணீர் வடிக்கிறாள்
கலை மகள்...
காணாமல் போன கல்வியை
யார் கண்டுபிடிப்பதென்று !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment