வீதிகள்தோறும் சுற்றறிக்கை வாசித்துக் கொண்டிருக்கும்
சேதியை எளிதில் கடந்து போகிறேன்,
பெருமழையொன்று இன்னமும் சற்று நேரத்தில்
சூறாவளியைத் துணைக்கழைத்துக் கொண்டு வரலாம்,
பற்றியெரிந்து கொண்டிருக்கும் நகரத்தின் சுவர்களை
யாரும் அணைக்க முற்படவில்லை,
எரியட்டுமென்றே உள்மனம் சந்தோசம் வாசிக்கிறது,
ஆலயங்களின் கதவுகளையெல்லாம் அடைத்துவிட்டார்களாம்,
யாசகம் கேட்காமல் பறித்துப் பசியாறின ஏழ்மையின் வயிறுகள்,
யுகமொன்று அழியப்போவதாகத்
தொலைக்காட்சிகள் அலறுகின்றன,
எரிந்து கொண்டிருக்கும் பணக்குவியலைப் பார்த்து
அழுது கொண்டிருக்கிறார்கள் ஆளுமைகள் ,
ஆட்சிக்காரன் எங்கிருக்கிறான் என்ற கேள்வி
இப்போதும்கூட யாருக்கும் எழவில்லை,
யாரை நம்பியும் இப்போது பயனில்லை,
சூடான தேநீருக்காக மட்டும்தான்
இப்போது நான் அலைந்து கொண்டிருக்கிறேன்,
இலையென்று ஒன்றிருக்குமானால்
துளிராகவும் கருகலாம், சருகாகவும் வீழலாம்,
சுவையையும்,ரசனையையும் தொலைத்துவிட்டுச் சாக
நானொன்றும் வடிகட்டிய முட்டாளில்லை
- மு.முகமது பாட்சா
சேதியை எளிதில் கடந்து போகிறேன்,
பெருமழையொன்று இன்னமும் சற்று நேரத்தில்
சூறாவளியைத் துணைக்கழைத்துக் கொண்டு வரலாம்,
பற்றியெரிந்து கொண்டிருக்கும் நகரத்தின் சுவர்களை
யாரும் அணைக்க முற்படவில்லை,
எரியட்டுமென்றே உள்மனம் சந்தோசம் வாசிக்கிறது,
ஆலயங்களின் கதவுகளையெல்லாம் அடைத்துவிட்டார்களாம்,
யாசகம் கேட்காமல் பறித்துப் பசியாறின ஏழ்மையின் வயிறுகள்,
யுகமொன்று அழியப்போவதாகத் தொலைக்காட்சிகள் அலறுகின்றன,
எரிந்து கொண்டிருக்கும் பணக்குவியலைப் பார்த்து
அழுது கொண்டிருக்கிறார்கள் ஆளுமைகள் ,
ஆட்சிக்காரன் எங்கிருக்கிறான் என்ற கேள்வி
இப்போதும்கூட யாருக்கும் எழவில்லை,
யாரை நம்பியும் இப்போது பயனில்லை,
சூடான தேநீருக்காக மட்டும்தான்
இப்போது நான் அலைந்து கொண்டிருக்கிறேன்,
இலையென்று ஒன்றிருக்குமானால்
துளிராகவும் கருகலாம், சருகாகவும் வீழலாம்,
சுவையையும்,ரசனையையும் தொலைத்துவிட்டுச் சாக
நானொன்றும் வடிகட்டிய முட்டாளில்லை
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment