
வார்த்தையொன்று
அநாதையாகக் கிடந்தது
வாரியணைத்துக் கொண்டாய்
முத்தப்பால் கொடுத்து
முதுகு நிமிர்த்தினாய்
அது கவிதையாக வளர்ந்தது
கிளைகளில் பூத்த இலைகளில்
உன் பெயரை எழுதினாய்
பூக்களை மடியில் சொறிந்தது
பறவைகள் வந்ததும்
நீ கிளம்பிவிட்டாய்
அவை இசைக்கும் பாடலில்
அந்த வார்த்தை இன்னமும் இருக்கிறது
காற்றில் அவை உன்னைச் சேரலாம்
சன்னலைத் திறந்து வை
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment