
தாள்களின் சயனத்தில்
கவிதைகள் மரணித்து நிற்க
வார்த்தைகளைத் தேடியலையும்
மொழிச் சூன்யத்தில்
நொம்பலம்
முதுகுத் தண்டில் சில்லிட்டு
முதுகுருக் காணாச் சங்கத்தின்
கடைவாய்நக்கித்தன மொழி
அயர்சியில் வந்த உறக்கத்தின்
சொப்பன மொழிகளில்
எட்டிப் பார்க்கும் எள்ளுதலாய்
ஒரு கவிதை!
துள்ளியெழுந்து
துயிலெழுப்பிய அத் தாள்களில்
தூரிகை நர்த்தனமிட நிம்மதி
மூச்சு விடும் கவிதையின்
சுகப் பிரசவம்!
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment