
எனக்கான தெருவில்
போய்க் கொண்டிருக்கிறேன்!
கல்லெறிந்தவன் சொல்கிறான்
அது
தனக்கான தெருவென்று!
வழக்காட விருப்பமின்றி
நகர்ந்தாலும்
கணக்காக
வம்பு சண்டைக்கிழுக்கிறான்!
கடன் காரனாக
இருக்க வாய்ப்பேயில்லை!
உறவுக்குள் சொல்லிக் கொள்ள
அப்படி
ஒருவன் இல்லவே இல்லை!
எதற்காக இந்த நிலையென்றால்...
தனக்கான பொழுதுப்
போகவில்லையென்கிறான்!
எனக்கான வேலைப் பார்க்க..
நான்
நிச்சயம் போக வேண்டும்!
அவனாக
களைத்துப் போகும் வரை...
அவன் அவனாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment