நாங்கள் ஒரு கூட்டமாகவே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
எங்களின் நிர்வாணத்தை யாரும்
பார்த்துவிடக் கூடாதென்பதற்காகவே
ஆடைகளைக் களைந்து விட்டோம்,
எங்களை
ஆடுகளென்று சொல்லிக் கொள்பவர்கள்
சொல்லிக் கொள்ளட்டும் ,
நாங்கள் கொடிப் பிடிப்பதற்காக ஒரு தலைவனும்
கோசம் போடுவதற்காக
சில கூட்டங்களும் தேவைப் படுகிறது,
ஆதிவம்ச அடிமைத் தொழிலை
எப்படிதான் எளிதில் மறக்க முடியும் ?
குனிந்தே கிடந்தவர்களுக்கு நிமிர்ந்தால்
முதுகு வலிக்கத்தான் செய்கிறது,
தவறிக் கைகளை உயர்த்திவிட்டாலும்
'வாழ்க!' கோசம்தான் வாய்கள் மொழிகின்றன,
எங்களையே திருடிச் சென்றாலும்
ஏனென்று நாங்கள் கேட்க மாட்டோம்,
ஏனென்றால்
நாங்கள் அத்துணை நல்லவர்களென்று
அவர்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்!
- மு.முகமது பாட்சா
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
எங்களின் நிர்வாணத்தை யாரும்
பார்த்துவிடக் கூடாதென்பதற்காகவே
ஆடைகளைக் களைந்து விட்டோம்,
எங்களை
ஆடுகளென்று சொல்லிக் கொள்பவர்கள்
சொல்லிக் கொள்ளட்டும் ,
நாங்கள் கொடிப் பிடிப்பதற்காக ஒரு தலைவனும்
கோசம் போடுவதற்காக
சில கூட்டங்களும் தேவைப் படுகிறது,
ஆதிவம்ச அடிமைத் தொழிலை
எப்படிதான் எளிதில் மறக்க முடியும் ?
குனிந்தே கிடந்தவர்களுக்கு நிமிர்ந்தால்
முதுகு வலிக்கத்தான் செய்கிறது,
தவறிக் கைகளை உயர்த்திவிட்டாலும்
'வாழ்க!' கோசம்தான் வாய்கள் மொழிகின்றன,
எங்களையே திருடிச் சென்றாலும்
ஏனென்று நாங்கள் கேட்க மாட்டோம்,
ஏனென்றால்
நாங்கள் அத்துணை நல்லவர்களென்று
அவர்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment