Tuesday, 22 August 2017

கரையாத காவியங்கள் - எழுத்தாளுமை - 1


                                                          லட்சுமி


                                               
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் லட்சுமி அவர்களுக்கு 
தனி இடம் உண்டு. லட்சக்கணக்கான வாசகிகள் 
அவரின் எழுத்துகளுக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

‘புத்தகம் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் 
லட்சுமியின் எழுத்தை நிச்சயம் படித்திருப்பார்’ என்பதை 
மெய்ப்பிப்பது போலவே இருந்தன அவர் எழுத்துகள். 
பெண்களின் ஆதர்ஷ எழுத்தாளர் என்று சொல்லலாம்  

இயற்பெயர் திரிபுரசுந்தரி. 1923, மார்ச் 21 அன்று திருச்சி மாவட்டம் 
தொட்டியம் என்கிற ஊரில் பிறந்தார். சிறு வயதில் 
பாட்டி சொன்ன கதைகள் மனதில் வேரூன்ற, எழுத்தின் 
மேலான வசீகரம் அவரை ஈர்த்தது. 

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். 
இரண்டாம் உலகப் போர் நடை பெற்ற நேரத்தில், 
நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, 
தந்தை சீனிவாசன் இவருடைய படிப்பை நிறுத்த முடிவு செய்தார். 
லட்சுமியோ பத்திரிகைகளில் எழுதி, அதில் வரும் வருவாயைக் கொண்டு 
படிப்பைத் தொடரலாம் என்று எண்ணினார். 
தொடர்ந்து எழுதவும் ஆரம்பித்தார். 

படித்து முடித்து அரசு மருத்துவராக வேலையில் சேர்ந்தார். அங்கு
கண்ணபிரான் என்பவரை காதலித்து, மணம் செய்து கொண்டார். 
கணவருடன் தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் வாழ்ந்தார். 

தென்னாப்பிரிக்காவிலும் அரசு மருத்துவராகவே பணியாற்றினார். 

இந்தத் தம்பதிக்கு மகேஸ்வரன் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. 
1968ல் கணவர் இறந்த பிறகு ஒன்பதாண்டுகள் தென்னாப்பிரிக்காவில் 
இருந்தார். பிறகு, தமிழகம் திரும்பியவர் பகுதி நேரமாக 
மருத்துவம் பார்த்துக் கொண்டு, முழு நேர எழுத்துப் பணியிலும் ஈடுபட்டார்.

 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150 நாவல்கள், 5 கட்டுரைத் 
தொகுப்புகள், 6 மருத்துவ நூல்களை எழுதியிருக்கும் இவர். 
தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். 

இவருடைய ‘ஒரு காவிரியைப் போல’ என்கிற நாவலுக்கு 
சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1987ம் ஆண்டு காலமானார்.


- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts