பூக்கள்
முத்தங்களை
பத்திர படுத்துங்கள்
இல்லை யென்றால்
எச்சில் பாத்திரமாகும்
உங்களின் உதடுகள்!
000
பழங்களைத் தின்ற
நன்றி கடனுக்காக
மரங்களை விதைக்கிறது
பறவைகள்!
000
மனிதர்கள்
மலர்களை நேசித்தாலும்,
மலர்கள் என்னவோ
வண்டுகளைதான் நேசிக்கின்றன!
000
புத்தகங்கள்
சுவாசிக்கின்றன
மனிதர்கள்
உயிர் வாழ்வதற்கு!
000
"காதலாவது!...கத்திரிக்காயாவது!"
என்றாள் அம்மா
தன் பழைய காதலை
மனதில் ஓடவிட்டு!
000
உறக்கம் போல் மரணம்
தினம் தினம் இறக்கிறேன்,
தினம் தினம் பிறக்கிறேன்,
அத்தனை பிறவியிலும்
உத்தமனாய் இல்லாமல் !
000
நீயாவது சொல்லிவிடு
அல்லது
நானாவது சொல்லி விடுகிறேன் ,
பிரிவு என்பதும்
ஒரு வகை தயக்கம்தான் !
- மு.முகமது பாட்சா
முத்தங்களை
பத்திர படுத்துங்கள்
இல்லை யென்றால்
எச்சில் பாத்திரமாகும்
உங்களின் உதடுகள்!
000
பழங்களைத் தின்ற
நன்றி கடனுக்காக
மரங்களை விதைக்கிறது
பறவைகள்!
000
மனிதர்கள்
மலர்களை நேசித்தாலும்,
மலர்கள் என்னவோ
வண்டுகளைதான் நேசிக்கின்றன!
000
புத்தகங்கள்
சுவாசிக்கின்றன
மனிதர்கள்
உயிர் வாழ்வதற்கு!
000
"காதலாவது!...கத்திரிக்காயாவது!"
என்றாள் அம்மா
தன் பழைய காதலை
மனதில் ஓடவிட்டு!
000
உறக்கம் போல் மரணம்
தினம் தினம் இறக்கிறேன்,
தினம் தினம் பிறக்கிறேன்,
அத்தனை பிறவியிலும்
உத்தமனாய் இல்லாமல் !
000
நீயாவது சொல்லிவிடு
அல்லது
நானாவது சொல்லி விடுகிறேன் ,
பிரிவு என்பதும்
ஒரு வகை தயக்கம்தான் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment