Tuesday, 22 August 2017

பூக்கள்

பூக்கள்

முத்தங்களை
பத்திர படுத்துங்கள்
இல்லை யென்றால்
எச்சில் பாத்திரமாகும்
உங்களின் உதடுகள்!

         000

பழங்களைத் தின்ற
நன்றி கடனுக்காக
மரங்களை விதைக்கிறது
பறவைகள்!

         000

மனிதர்கள்
மலர்களை நேசித்தாலும்,
மலர்கள் என்னவோ
வண்டுகளைதான் நேசிக்கின்றன!

         000

புத்தகங்கள்
சுவாசிக்கின்றன
மனிதர்கள்
உயிர் வாழ்வதற்கு!

           000

"காதலாவது!...கத்திரிக்காயாவது!"
என்றாள் அம்மா
தன் பழைய காதலை
மனதில் ஓடவிட்டு!

             000

உறக்கம் போல் மரணம்
தினம் தினம் இறக்கிறேன்,
தினம் தினம் பிறக்கிறேன்,
அத்தனை பிறவியிலும்
உத்தமனாய் இல்லாமல் !

                000

நீயாவது சொல்லிவிடு
அல்லது 
நானாவது சொல்லி விடுகிறேன் ,
பிரிவு என்பதும்
ஒரு வகை தயக்கம்தான் !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts