Friday, 25 August 2017

கோபம்

கோபம்

Image may contain: 1 person

மூக்கின் நுனி வரை
முத்தாய் துளிர்த்து,
.....கொவ்வைப் பழம் போல்
முகத்தில் வெடித்து,
.....கண்களில்,அரக்க 
குணத்தைக் காட்டி,
.....கை, கால் களெல்லாம்
நடு நடுங்க,
.....புத்தி, சுயமும்
விட்டு விலகி,
.....பித்தன் போன்ற
நிலையில் நிறுத்தி,
.....மானம் தன்னை
இழக்கச் செய்யும்
.....மாபெரும் பொருளே....
கோபமாகும்!

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts