கனவு

தாஜிஸ்தானில் ஒரு பள்ளத்தாக்கில் நண்பகல் வெம்மையில்
என் மார்பில் ஒரு குண்டு தைத்திருக்க,
அசைவின்றி விழுந்துகிடக்கிறேன்.
சுடப்பட்ட இடத்தின் ஆழமான காயம்
இன்னும் புகைந்துகொண்டிருக்கிறது.
சொட்டுச் சொட்டாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
ரத்தம், மார்பு நனைத்து…
பள்ளச்சரிவின் மணலில்
விழுந்துகிடக்கிறேன் நான் மட்டும் தனியனாய்.
என்னைச் சுற்றிலுமிருக்கும் பாறை முகடுகளில்
மஞ்சள் சிகரங்களைப் பிரகாசித்து
அவை மீது சுட்டெரிக்கிறான் போலும் சூரியன்.
என்னையும் சுட்டெரிக்கிறான் போலும்.
உறக்கத்தில் ஆழ்கிறேன்,
சாவின் விளிம்பில் ஒரு கனா காண்கிறேன்…
என் தாயகத்தி்ல் ஆர்ப்பாட்டமாய்
கொழுக்கின்றன எழுந்தாடுகின்றன
கொண்டாட்டங்களின் ஜுவாலைகள்.
வண்ண வண்ண உடைகளில் திரைகளில்
குழுமுகிறார்கள் இளம் பெண்கள், சந்தோஷத்தில்.
என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்…
அந்தச் சந்தோஷ பேச்சுகளிலிருந்து
விலகி நிற்கிறாள் ஒருத்தி.
சோகச் சிந்தனையொன்றில் ஆழ்ந்தவளாக
தனியாக அமர்ந்திருக்கிறாள்.
அவளது இளம் இதயம் உறைந்து போயிருக்கிறது,
துயரத்தில் இருக்கிறது.
அவள் கனவில் தன்னை இழந்திருந்தாள்.
என்ன கண்டாள், கடவுளுக்கே வெளிச்சம்!
தாஜிஸ்தானில் ஒரு பள்ளத்தாக்கை
அவள் தன் கனவில் கண்டாள்.
அவளுக்குத் தெரிந்தவன் ஒருவனின் பிணம்
தரையில் விழுந்துக் கிடக்கக் கண்டாள்.
சுடப்பட்ட இடத்தின் ஆழமான காயம்
இன்னும் புகைந்துகொண்டிருக்கிறது.
சொட்டுச் சொட்டாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
ரத்தம், தரையெல்லாம் நனைந்து, குளிரில் உறைந்து…
.
கவிஞர் லெர்மான்த்தோவ் மிகையீல் யூர்யேவிச்
- (ரஷ்யாவை சேர்ந்த 17ம் நூற்றாண்டின் இணையற்ற
ரொமேண்டிக் கவிஞர். நாடகம், நாவல்களும் எழுதியுள்ளார்)
.
தமிழில்: செ ச செந்தில்நாதன்

தாஜிஸ்தானில் ஒரு பள்ளத்தாக்கில் நண்பகல் வெம்மையில்
என் மார்பில் ஒரு குண்டு தைத்திருக்க,
அசைவின்றி விழுந்துகிடக்கிறேன்.
சுடப்பட்ட இடத்தின் ஆழமான காயம்
இன்னும் புகைந்துகொண்டிருக்கிறது.
சொட்டுச் சொட்டாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
ரத்தம், மார்பு நனைத்து…
பள்ளச்சரிவின் மணலில்
விழுந்துகிடக்கிறேன் நான் மட்டும் தனியனாய்.
என்னைச் சுற்றிலுமிருக்கும் பாறை முகடுகளில்
மஞ்சள் சிகரங்களைப் பிரகாசித்து
அவை மீது சுட்டெரிக்கிறான் போலும் சூரியன்.
என்னையும் சுட்டெரிக்கிறான் போலும்.
உறக்கத்தில் ஆழ்கிறேன்,
சாவின் விளிம்பில் ஒரு கனா காண்கிறேன்…
என் தாயகத்தி்ல் ஆர்ப்பாட்டமாய்
கொழுக்கின்றன எழுந்தாடுகின்றன
கொண்டாட்டங்களின் ஜுவாலைகள்.
வண்ண வண்ண உடைகளில் திரைகளில்
குழுமுகிறார்கள் இளம் பெண்கள், சந்தோஷத்தில்.
என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்…
அந்தச் சந்தோஷ பேச்சுகளிலிருந்து
விலகி நிற்கிறாள் ஒருத்தி.
சோகச் சிந்தனையொன்றில் ஆழ்ந்தவளாக
தனியாக அமர்ந்திருக்கிறாள்.
அவளது இளம் இதயம் உறைந்து போயிருக்கிறது,
துயரத்தில் இருக்கிறது.
அவள் கனவில் தன்னை இழந்திருந்தாள்.
என்ன கண்டாள், கடவுளுக்கே வெளிச்சம்!
தாஜிஸ்தானில் ஒரு பள்ளத்தாக்கை
அவள் தன் கனவில் கண்டாள்.
அவளுக்குத் தெரிந்தவன் ஒருவனின் பிணம்
தரையில் விழுந்துக் கிடக்கக் கண்டாள்.
சுடப்பட்ட இடத்தின் ஆழமான காயம்
இன்னும் புகைந்துகொண்டிருக்கிறது.
சொட்டுச் சொட்டாக வெளியேறிக்கொண்டிருக்கிறது
ரத்தம், தரையெல்லாம் நனைந்து, குளிரில் உறைந்து…
.
கவிஞர் லெர்மான்த்தோவ் மிகையீல் யூர்யேவிச்
- (ரஷ்யாவை சேர்ந்த 17ம் நூற்றாண்டின் இணையற்ற
ரொமேண்டிக் கவிஞர். நாடகம், நாவல்களும் எழுதியுள்ளார்)
.
தமிழில்: செ ச செந்தில்நாதன்
No comments:
Post a Comment