
சிக்கந்தர் துல்கர்னைன்
கொண்டு சென்றதொன்றுமில்லை ,
சாலமனின் மரணத்தை
ஜின்களுமே அறியவில்லை ,
இறைத் தூதரென்று வந்த
நபிகள் யாரும் உயிரோடில்லை ,
அளவிற்கதிகம் சேர்த்துவைத்த
காரூனும்தான் பூமிப்பிள்ளை ,
தேசத்திற்குச் சண்டையிட்ட
பாண்டவர்களும் வாழவில்லை ,
இராவணனை கொன்றழித்த
இராமனுக்கும் ஆயுளில்லை ,
நாடுவிட்டு நாடு வாழ்ந்த
ஹிட்லரும்தான் இன்று இல்லை ,
நல்லவரோ ,கெட்டவரோ
நாள் கடந்து வாழ்ந்ததில்லை ,
வாழ்கவென்ற புகழ் மொழியால்
வாழ்ந்ததாக வரலாறில்லை ,
பூமியில் நாமெல்லாம்
வந்து போகும் செல்லப் பிள்ளை
நேசம் மட்டும் இருந்துவிட்டால்
போகும் காலம், இல்லை தொல்லை!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment