Wednesday, 23 August 2017

யாரும் இங்கில்லை

Image may contain: one or more people, outdoor and water

சிக்கந்தர் துல்கர்னைன் 
கொண்டு சென்றதொன்றுமில்லை , 
சாலமனின் மரணத்தை 
ஜின்களுமே அறியவில்லை , 
இறைத் தூதரென்று வந்த 
நபிகள் யாரும் உயிரோடில்லை , 
அளவிற்கதிகம் சேர்த்துவைத்த 
காரூனும்தான் பூமிப்பிள்ளை , 
தேசத்திற்குச் சண்டையிட்ட 
பாண்டவர்களும் வாழவில்லை , 
இராவணனை கொன்றழித்த 
இராமனுக்கும் ஆயுளில்லை , 
நாடுவிட்டு நாடு வாழ்ந்த 
ஹிட்லரும்தான் இன்று இல்லை , 
நல்லவரோ ,கெட்டவரோ 
நாள் கடந்து வாழ்ந்ததில்லை , 
வாழ்கவென்ற புகழ் மொழியால் 
வாழ்ந்ததாக வரலாறில்லை , 
பூமியில் நாமெல்லாம் 
வந்து போகும் செல்லப் பிள்ளை 
நேசம் மட்டும் இருந்துவிட்டால் 
போகும் காலம், இல்லை தொல்லை! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts