Friday, 11 August 2017

என்னை நனைக்கிறாள்!

என்னை நனைக்கிறாள்!

Image may contain: 2 people

'மழையில் நனையாதே'
என்றுதான்-
உனக்கு  நான் 
குடை பிடித்தேன்.
குடை நனைகிறதேயென்று
நீயேன் அடம் பிடிக்கிறாய்!

'நீ நனைவாய்' என்றேன்,
பரவாயில்லை' என்றாய்,
'உன் உடை நனையும்' என்றேன்.
நனையட்டும்' என்றாய்,
'உன் உடல் நனையும்' என்றேன்.
இருக்கட்டும்' என்கிறாய்!
'என் உயிர் நனையும்' என்கிறேன்
அப்படியா!' என்று வியக்கிறாய்

'என் பார்வை சுடும்' என்றால்
சுடட்டும்' என்று, நகைக்கிறாய்.
இதை மட்டும்,ஏன் 
காமத்தின் வலிகளோடுவே
கண்களால்  சொல்கிறாய்?

ஆக ,
நீ  மழைக்கு  வேண்டும்,
எனக்கு மழையாய் 
நீதான் வேண்டும்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts