
கவர்ச்சியின் கட்டுடல்
காலத்தோடு கரைந்து போனது
கவலைப் படாதே கண்மணி
காதலுக்கு மூப்பே கிடையாது !
ஆபாசம் அறுவெறுப்பும்
இளமைக்குதான் பல்லிளிக்கும்
முதுமைக்கேன் முக்காடு ?
தேவையில்லை முத்தழகி...
இளமையின் நேசமெல்லாம்
வேசமென்றும் பெயர்ச் சூடும் ,
முதுமைக்கோ வேசமில்லை
முக்குளிப்போம் வா, காதலி !
மரணத்தின் காலம் நம்மை
தொட்டுதான் காத்திருக்கு ,
மடிமீது தலை சாய்ந்து
காதலை நாம் வாழ் வைப்போம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment