
நானெழுதிய புத்தகம்
நாற்பது ரூபாய் ,
நானெழுதிய புத்தகம்
அறுபது ரூபாய் !
நானொரு கதை சொல்லி
நானொரு கவிதை பாடி
பூ வாங்கலயோ பூவூ
மல்லிப் பூ முழம் நாலு ரூபா
முல்லைப் பூ முழம் மூணு ரூபா !
அள்ளிக்கோ அள்ளிக்கோ
கத்தரிக்காய் கால் கிலோ பத்து ரூபா
அவரைக்காய் கால் கிலோ ஆறு ரூபா !
நானெழுதிய புத்தகம்
நாற்பது ரூபாய் ,
நானெழுதிய புத்தகம்
அறுபது ரூபாய் !
ஏன் சாமி ,
பொஸ்தவம் இன்னுமா விக்கல ?
நேரம் போச்சி சாமி
போயிட்டு நாளைக்கு வா !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment