Monday, 14 August 2017

நா. முத்துகுமார்

 நா . முத்துகுமார்

Image may contain: one or more people, people eating and food
.
மெளனமாய் ஒரு மரணம் 
கவிதைகளைக் களவாடிச் சென்று விட்டது ! 
ஒரு கல், ஒரு கண்ணாடியின் மீது 
மோதி விட்டது ! 
பட்டாம் பூச்சி விற்பவன் கைகளில் 
பட்டாம் பூச்சிகளில்லை 
சிறகுகளை இரவல் வாங்கியவன் 
இவனும் சிறகடித்து விட்டான் ! 
கவிதைகளுக்குள் மூழ்கிப் போனவன் 
மரணத்தில் மூழ்கி 
முத்தெடுக்கவா போனான் ? 
மதுவும், புகையும் கவிஞனை மட்டுமல்ல 
கவிதைகளையும் சாகடிக்கும் ! 
மஞ்சள் காமாலை 
மரணத்திற்கு ஒரு சாக்குதான் ! 
போய் வா முத்துகுமார் ! 
உன் கவிதைகளை 
சாகாமல் பார்த்துக் கொள்கிறோம் !

- மு.முகமது பாட்சா

கவிஞரின் மறைவு அன்று எழுதப்பட்டது

No comments:

Post a Comment

Popular Posts