விடிந்த பிறகு தெரியும்

கறுப்புத் தாளொன்றில்
எனக்கான இரவுகளை
வடிவமைக்கிறேன் ,
நட்சத்திரங்களும் , நிலவும்
வண்ணம் பூசிக் கொள்ள
மேகங்கள் சாம்பல் நிறத்தில் ...
ஒற்றை மரம்
எனக்குப் பிடித்தமாக இருக்கிறது ,
நிச்சயமாக அது
போதி மரமாக இருக்க விரும்பவில்லை ,
இலைகளை வரைந்தவன்
அசைவதை மனதில் வரைகிறேன் ,
சில்லென்றக் காற்று
புழுக்கம் ஓடிப் போக நிச்சயம் தேவை ,
மரத்தின் அருகில் தளும்பிய குளம் ,
மொக்குகளாய் அல்லிப் பூக்கள் ,
ஒற்றைக் கொக்கு வெள்ளையாய் போதும் ,
விரல்களை நீரில் எழுத நீலம் தேவை ....
இப்போது நான் தனிமையில்லை,
பெண்களுக்கும் அனுமதியில்லை ....
ஒப்பனைச் செய்வது அத்தனை கடினம் ,
கறுப்பான பக்கம் வண்ணம் கூடி
சிறப்பாக இயங்குகிறது,
கண்களை மூடி அயர்ந்துறங்குகிறேன்,
நான் வரையாத பாம்பொன்று
என்னைக் கொத்திவிட்டுப் போகிறது ,
பிழைப்பதும் , இறப்பதும்
இனி விடிந்த பிறகுதான் தெரியும் !
- மு.முகமது பாட்சா

கறுப்புத் தாளொன்றில்
எனக்கான இரவுகளை
வடிவமைக்கிறேன் ,
நட்சத்திரங்களும் , நிலவும்
வண்ணம் பூசிக் கொள்ள
மேகங்கள் சாம்பல் நிறத்தில் ...
ஒற்றை மரம்
எனக்குப் பிடித்தமாக இருக்கிறது ,
நிச்சயமாக அது
போதி மரமாக இருக்க விரும்பவில்லை ,
இலைகளை வரைந்தவன்
அசைவதை மனதில் வரைகிறேன் ,
சில்லென்றக் காற்று
புழுக்கம் ஓடிப் போக நிச்சயம் தேவை ,
மரத்தின் அருகில் தளும்பிய குளம் ,
மொக்குகளாய் அல்லிப் பூக்கள் ,
ஒற்றைக் கொக்கு வெள்ளையாய் போதும் ,
விரல்களை நீரில் எழுத நீலம் தேவை ....
இப்போது நான் தனிமையில்லை,
பெண்களுக்கும் அனுமதியில்லை ....
ஒப்பனைச் செய்வது அத்தனை கடினம் ,
கறுப்பான பக்கம் வண்ணம் கூடி
சிறப்பாக இயங்குகிறது,
கண்களை மூடி அயர்ந்துறங்குகிறேன்,
நான் வரையாத பாம்பொன்று
என்னைக் கொத்திவிட்டுப் போகிறது ,
பிழைப்பதும் , இறப்பதும்
இனி விடிந்த பிறகுதான் தெரியும் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment