Friday, 25 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 51

2083 ஆகஸ்ட் 11

Image may contain: 1 person, sunglasses and closeup

என் கவிதை ஒன்று 
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில் 
கிடைத்தது 
கடற்கரையில் 
நானும் ஞானக்கூத்தனும் 
பேசிக்கொண்டிருந்தோம் 
சுண்டல் வாங்கிப் பிரித்தால் 
காகிதத்தில் ஒரு கோடு 
ஆத்மாநாம் எனும் வாசகங்கள் 
கவிதை ஆரம்பம் 
ஆச்சர்யத்துடன் 
ஞானக்கூத்தனைக் கேட்டேன் 
இன்னும் இங்கேவா இருக்கிறோம் 
அவர் 
சூளைச் செங்கல் குவியலிலே 
தனிக்கல் ஒன்று சரிகிறது 
என்றார் 
என்ன இது வினோதம் 
இருந்த இடத்திலேயே இருப்பது 
என்றேன் 
இருப்பதை உணர்வதே வாழ்க்கை 
என்றார் 
நகுலன் எங்கே என்றேன் 
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார் 
என்றார் 
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன் 
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள 
என்றார் 
நன்றி என்றேன் 
அப்பொழுதுதான் 
ஒரு அணுகுண்டு வெடித்த 
சப்தம் கேட்டது 
இருவரும் 
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.
.
கவிஞர் ஆத்மநாம்

No comments:

Post a Comment

Popular Posts