Friday, 4 August 2017

பம்பரம்

பம்பரம்

தில்லையாடிச் சிதம்பரமாய் 
ஒற்றைக்காலில் ஓரங்கம் 
நிற்காமல் சுழன்றாடி , 
நிற்கும் தரையில் குழிப்பறித்துச் 
சுற்றிப் பொரிக் கிளப்பி 
தலைக் கனம் வீழும் அவ்வேளையில், 
சுற்றம் பார்த்துத் தலைக்கவிழ்ந்து , 
ஆட்டம் அடங்கி அலையும் நேரத்தில் ; 
சாட்டை , அடுத்தொரு ஆட்டம் 
துவங்கும் களிப்பில் 
ஆட்டுவிப்பன் கைகளில் துள்ளியெழ 
சற்றே தலைச் சாயும் பம்பரம் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts