
கசங்கிய காகிதங்களில்
கவிதை மொழிகள் வாழ்விழந்து,
தேடல்களில் களைத்து போகும்
பேனாவின் முனை ,
அவள் அழகிற்காகத் தேடபட்ட சொற்கள்
அகராதிகளி லில்லை ,
அப்படியென்ன அவ்வளவு அழகா நீ?
காதலிக்கும் வரை
ஒப்பனைப் பூசும் மொழிகள்,
காலம் கடந்ததும் கலைந்து போகலாம்
வர்ணனைகளின் வார்த்தைகள்
கசங்காத காகிதங்களாய்,
கற்பிழந்து சிரிக்கும் ,
வெள்ளைத் தாளில் "நேசிக்கிறேன்"
என்ற ஒற்றை வார்த்தை போதுமே ,
நீ நீயாகவே இரு , நான் நானாகவே இருக்கிறேன்,
நிலவுகளையும், மலர்களையும்
தொந்திரவு செய்ய வேண்டாம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment