காத்தாடி.

மகுடி மேல் சீறிவரும்
நாகம் போல் ஆடிற்றடி
மின்னலைப் போல் வெகுண்டு
முகிலிடையே எரிந்ததடி
கத்தியைப் போல் சுருண்டு
வெளியெங்கும் சுழன்றதடி
ராகுவைப் போல் எழுந்து ஓடி
சூரியனைத் தீண்டிற்றடி,
குரங்கைப் போல் வாலடித்து
கர்ணம் பல போட்டதடி,
காலைப் புறாவைப் போல
புள்ளியாய் மறைந்ததடி!
.
- ந பிச்சமூர்த்தி
No comments:
Post a Comment