Wednesday, 16 August 2017

ஆளுக்கொரு கதை சொல்கிறார்கள்

Image may contain: one or more people, eyeglasses and closeup


இறந்து கிடக்கும் என்னை விட்டெழுந்து 
ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறேன் ,
ஓயாத அழுகைகளில் ஒன்றிரண்டைத் தவிர 
அத்தனையும் போலிகள் , 
வாங்காத கடனை நான்  வாங்கியதாய் 
பொய்ச் சொல்லியொருவன் அழுகிறான் ,
என்னையே பார்க்காத ஒருவன் 
என்னிடம் பேசியதாக கதை விடுகிறான் ,
இல்லாத சொத்துக்காக இருவர் 
கணக்கிட்டு அழுகிறார்கள் ,
இருக்கும் உறவுகளில் சிலர் 
செலவிற்குப் பயந்தும் நழுவுகிறார்கள் , 
இதுதான் வாழ்க்கையென்று  ஒருவன் 
இருப்பைச் சொல்லிவிட்டு அழுகிறான் , 
இதுவா வயதென்று ஒருவன் 
சொல்லிச் சொல்லியே மாய்கிறான் , 
நான் முட்டாளாய் வாழ்ந்ததாகவே 
ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான் , 
இத்தனைக்கும் நடுவே ஒருவன் 
சீக்கிரமாய் எடுத்திடுங்கள் 
இல்லையென்றால் நாறிவிடும் என்றே 
மூக்கைப் பொத்தி நகர்கிறான் , 
ஆளுக்கொரு கதை சொல்லிகள் 
இங்கேதான் வந்து எழுதுகிறார்கள்,
அவர்களும்
போகப் போகும் கதையறியாமல் 
புலம்பியேத்தான் அழுகிறார்கள் ! 

- மு.முகமது பாட்சா


No comments:

Post a Comment

Popular Posts