கவிதைகளின் பொய்களுக்கு
காரணம் கேட்கிறாய் !
.அவை
நீ சொல்லிவைத்த
பொய்கள்தான் என்பதை
நானெப்படி சொல்வது ?
***
கண்ணாமூச்சி
விளையாட்டில்
கட்டவிழ்த்தே
விளையாடுகிறாய்,
.
நீ பிடிப்பதற்காகவே
நானும்,
மாட்டிக் கொள்கிறேன் !
***
வரிகளில்
உட்கார மறுக்கும் சில வார்த்தைகள்
நீ சொல்லியதுதான் !
.
அஃது எனக்காக
எனக்காக மட்டுமே !
***
வாக்குறுதிகள்
வாக்குறுதிகளாகவே
மடிந்து போகிறது
தேர்தல் முடிந்த பின்பு...
.
நீ எப்போது
அரசியலில் சேர்ந்தாய்?
***
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment