கதையாய் ஒரு காதல்

'நிலா நிலா ஓடிவா' என்றான்
'உன்னை நம்பிதான் ஓடி வரேன்' என்றாள்
'நில்லாமல் ஓடி வா!'
'உன்னை நம்பினதுக்கு கால் வலிதான்டா
மிச்சம்?' என்றாள்.
'மலை மீது ஏறி வா!'
'ஏன், ஒரேடியாய் சாகடிக்கவா?' என்றாள்
அடுத்து,
'காக்கா காக்கா மை கொண்டா!' என்றான்
'நீ முதல்ல எனக்கு சோறு கொண்டா!' என்றாள்
'காடைக் குருவி மலர் கொண்டா!'
'அப்படியே, ஒரு விலக்கு மாறும் கொண்டாரச் சொல்'
என்றாள்!
'பசுவே பசுவே பால் கொண்டா!'
'அடச் சோம்பேறி!
அதைக் கூட அதுதான் எடுத்துவந்து,
உன் கையில் கொடுக்கணுமா?'
'பச்சை கிளியே பழம் கொண்டா!' என்றான்
'டேய், உன்னை நம்பினதுக்கு,
அதுகளை நம்பி ஓடி யிருக்கலாம்!-
நிலா ஓடினாள்
அவன், பின்னாலேயே ஓடி வந்தான்....
'நிலா நிலா ஓடி வா!'
'செருப்பு பிஞ்சிடும்,
ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு!'
- மு.முகமது பாட்சா

'நிலா நிலா ஓடிவா' என்றான்
'உன்னை நம்பிதான் ஓடி வரேன்' என்றாள்
'நில்லாமல் ஓடி வா!'
'உன்னை நம்பினதுக்கு கால் வலிதான்டா
மிச்சம்?' என்றாள்.
'மலை மீது ஏறி வா!'
'ஏன், ஒரேடியாய் சாகடிக்கவா?' என்றாள்
அடுத்து,
'காக்கா காக்கா மை கொண்டா!' என்றான்
'நீ முதல்ல எனக்கு சோறு கொண்டா!' என்றாள்
'காடைக் குருவி மலர் கொண்டா!'
'அப்படியே, ஒரு விலக்கு மாறும் கொண்டாரச் சொல்'
என்றாள்!
'பசுவே பசுவே பால் கொண்டா!'
'அடச் சோம்பேறி!
அதைக் கூட அதுதான் எடுத்துவந்து,
உன் கையில் கொடுக்கணுமா?'
'பச்சை கிளியே பழம் கொண்டா!' என்றான்
'டேய், உன்னை நம்பினதுக்கு,
அதுகளை நம்பி ஓடி யிருக்கலாம்!-
நிலா ஓடினாள்
அவன், பின்னாலேயே ஓடி வந்தான்....
'நிலா நிலா ஓடி வா!'
'செருப்பு பிஞ்சிடும்,
ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு!'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment