Wednesday, 30 August 2017

கறைப் படிந்து

affliction man painting க்கான பட முடிவு

என் இருக் கைகளையும் 
இறுக மூடியே வைத்திருக்கிறேன்
அதன் உள்ளிருந்து 
ஒரு வெப்பக்காற்று கழன்று திமிர்க்கிறது,
ஒரு வனம் 
தன்னையே தகவமைக்க முயற்சிக்கிறது,
சமுத்திரமொன்று 
அலையெழுப்பி அலையெழுப்பி ஓய்கிறது
முடிக்க முடியாத கவிதையொன்று 
ஒரு யுகமாய் மூச்சிறைக்கிறது,
பிராகாரத்து புஷ்பங்களெல்லாம்
தீ பற்றியெரிகின்றன,
சில்லென்ற காற்றுக்கேங்கும் நிழலாய்
நான் ஓர் ஓரமாய் நடந்து செல்கிறேன்...
என் இருக் கைகளையும் 
இறுக மூடி வைத்துக் கொண்டே, 
என்னை தூக்கிச் செல்லும் 
அந்த நால்வருக்கும் கூடத் தெரியாது
என் விரல்களுக்கிடையில் வழியும் நதி
கறைப் படிந்துதான் ஓடுகிறதென்று!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts