Friday, 25 August 2017

கண்ணீர் விற்பனைக்கு

Image may contain: one or more people

கண்ணீர் 
வாங்கப் படும் 
அரசு அறிவிப்பு ! 
சந்தோசக் கண்ணீர் 
சற்றும் உதவாது , 
ஏழைகளின் கண்ணீருக்கு 
விலை யதிகம் ... 
உப்பும் அதனில் 
சொச்சமாய் எடுக்கலாம் ! 
ஆதார் கார்டு 
முக்கிய அவசியம் , 
வங்கி மூலம்தான் 
பணம் பட்டுவாடா ! 
வாங்கிய கடனை -அதில் 
பிடிக்கப் படும் ! 
கூடுதல் 
கண்ணீர் வர வழைக்க 
அரசு உத்தரவாதம் ! 
பரிதாபக் கண்ணீர்களுக்கு 
நிச்சயம் விலையில்லை ! 
உச்சுக் கொட்டுவதை 
நிறுத்திக் கொள்ள உத்தரவு ! 
ஏழைகளின் பசி போக்க 
நல்லதொரு திட்டமென்று , 
அரசு விளம்பரத்தில் 
கண்ணீரின் மகிமைகள் ! 
ஏழைகளாய் மாறுவதற்கு 
மக்கள், 
ஒத்துழைக்க வேண்டுமாம் ! 
அன்னிய முதலீட்டில் 
அதற்கான ஒப்பந்தம் ரெடி! 
கண்ணீர் விற்க 
காத்து நிற்கின்றது கூட்டம் , 
கால் வலியும் சேர்ந்து வந்தால் 
கூடுதலாய் கிடைக்கும் 
கண்ணீர். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts