
கண்ணீர்
வாங்கப் படும்
அரசு அறிவிப்பு !
சந்தோசக் கண்ணீர்
சற்றும் உதவாது ,
ஏழைகளின் கண்ணீருக்கு
விலை யதிகம் ...
உப்பும் அதனில்
சொச்சமாய் எடுக்கலாம் !
ஆதார் கார்டு
முக்கிய அவசியம் ,
வங்கி மூலம்தான்
பணம் பட்டுவாடா !
வாங்கிய கடனை -அதில்
பிடிக்கப் படும் !
கூடுதல்
கண்ணீர் வர வழைக்க
அரசு உத்தரவாதம் !
பரிதாபக் கண்ணீர்களுக்கு
நிச்சயம் விலையில்லை !
உச்சுக் கொட்டுவதை
நிறுத்திக் கொள்ள உத்தரவு !
ஏழைகளின் பசி போக்க
நல்லதொரு திட்டமென்று ,
அரசு விளம்பரத்தில்
கண்ணீரின் மகிமைகள் !
ஏழைகளாய் மாறுவதற்கு
மக்கள்,
ஒத்துழைக்க வேண்டுமாம் !
அன்னிய முதலீட்டில்
அதற்கான ஒப்பந்தம் ரெடி!
கண்ணீர் விற்க
காத்து நிற்கின்றது கூட்டம் ,
கால் வலியும் சேர்ந்து வந்தால்
கூடுதலாய் கிடைக்கும்
கண்ணீர்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment