
புத்தகத்தின் முனையில்
உட்கார்ந்த கொசுவொன்று
மொத்தம் படித்த மெத்த
அறிவாளி தான் தானென்று
சொல்லித் திரியும் வேளையில்
ஊசியின் காதில் நுழைய
வழி கேட்ட ஒட்டக விலங்கிடம்
தன் பின்னால் வரச் சொல்லி,
ஊசியின் காது வழி
நுழையும் முயற்சியில்
சிக்கிச் சிதைந்திருந்த
கொசு கேட்டிருக்க வாய்ப்பிலை,
.
நாட்டின் பொருளாதாரம்
சிக்கிச் சீரழியும் கதை !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment