Wednesday, 23 August 2017

விதைகள்

விதைகள்

சாமியை தரிசிக்க வந்த
பக்தன் சொன்னான்,
'கடவுளுக்கு கண்ணில்லை!            

***

நான் என்ற ஒற்றைச் சொல்லில்
அகம்பாவம் தொக்கி நிற்கிறது!

***

நல்ல தகப்பனாய் இருப்பதைவிட
நல்ல தோழனாக இருங்கள்,
அவர்களும், உங்களுக்கு
நல்ல பிள்ளைகளாகவே இருப்பார்கள்.

***

பழங்களுக்கு தெரிவதில்லை
தாம் ஒரு விருட்சத்தை
வைத்திருக்கிறோம் என்று!

***

தூங்கி விழித்த பிறகுதான் 
தெரிந்தது...
'நான், இப்போதுதான்
பிறந்திருக்கிறேன்!'

***

காதல் சொல்ல வந்தவன்
காமத்தில் மூழ்கிப் போகிறான்!
'இவன்,என்ன மாடல்?'

***

மருமகள்
புள்ளி வைத்துக் கோலம் போடுகிறாள் 
முதியோர் இல்லத்தில் 
மாமனார்,மாமியார் !

***

கோட்டைப் போட்டு 
தாண்டாதே என்கிறான்
லட்சுமண ரேகையை தாண்டியவள்தான் 
சீதையென்கிறாள்!

***

மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts