விதைகள்
சாமியை தரிசிக்க வந்த
பக்தன் சொன்னான்,
'கடவுளுக்கு கண்ணில்லை!
***
நான் என்ற ஒற்றைச் சொல்லில்
அகம்பாவம் தொக்கி நிற்கிறது!
***
நல்ல தகப்பனாய் இருப்பதைவிட
நல்ல தோழனாக இருங்கள்,
அவர்களும், உங்களுக்கு
நல்ல பிள்ளைகளாகவே இருப்பார்கள்.
***
பழங்களுக்கு தெரிவதில்லை
தாம் ஒரு விருட்சத்தை
வைத்திருக்கிறோம் என்று!
***
தூங்கி விழித்த பிறகுதான்
தெரிந்தது...
'நான், இப்போதுதான்
பிறந்திருக்கிறேன்!'
***
காதல் சொல்ல வந்தவன்
காமத்தில் மூழ்கிப் போகிறான்!
'இவன்,என்ன மாடல்?'
***
மருமகள்
புள்ளி வைத்துக் கோலம் போடுகிறாள்
முதியோர் இல்லத்தில்
மாமனார்,மாமியார் !
***
கோட்டைப் போட்டு
தாண்டாதே என்கிறான்
லட்சுமண ரேகையை தாண்டியவள்தான்
சீதையென்கிறாள்!
***
மு.முகமது பாட்சா
சாமியை தரிசிக்க வந்த
பக்தன் சொன்னான்,
'கடவுளுக்கு கண்ணில்லை!
***
நான் என்ற ஒற்றைச் சொல்லில்
அகம்பாவம் தொக்கி நிற்கிறது!
***
நல்ல தகப்பனாய் இருப்பதைவிட
நல்ல தோழனாக இருங்கள்,
அவர்களும், உங்களுக்கு
நல்ல பிள்ளைகளாகவே இருப்பார்கள்.
***
பழங்களுக்கு தெரிவதில்லை
தாம் ஒரு விருட்சத்தை
வைத்திருக்கிறோம் என்று!
***
தூங்கி விழித்த பிறகுதான்
தெரிந்தது...
'நான், இப்போதுதான்
பிறந்திருக்கிறேன்!'
***
காதல் சொல்ல வந்தவன்
காமத்தில் மூழ்கிப் போகிறான்!
'இவன்,என்ன மாடல்?'
***
மருமகள்
புள்ளி வைத்துக் கோலம் போடுகிறாள்
முதியோர் இல்லத்தில்
மாமனார்,மாமியார் !
***
கோட்டைப் போட்டு
தாண்டாதே என்கிறான்
லட்சுமண ரேகையை தாண்டியவள்தான்
சீதையென்கிறாள்!
***
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment