Saturday, 5 August 2017

மரப்பாச்சி பொம்மை

Image may contain: bird

காலத் தச்சன் செய்த 
மரப்பாச்சிப் பொம்மைக்கு 
வெள்ளைப் புறாவொன்று 
உயிர் கொடுத்துப் போகிறது,

காலத் தச்சன் 
இறந்துகிடக்கிறான் 
மரணத்தில் மர்மம் இருப்பதாக 
உயிர் கொடுத்த புறா 
சொல்லிவிட்டுப் பறக்கின்றது, 

மரப்பாச்சியின் பற்களில் 
இரத்தக் கறை ...
உதிரப்போக்கு 
இடம் மாறிவிட்டதாம் ,

இரண்டு நாட்களாக 
வெள்ளைப்புறாவைக் காணவில்லை , 

புறாவின் கறிச் சீரணிக்காமல் 
மரப்பாச்சிப் பொம்மை 
இறந்து கிடப்பதாக 
யார் யாரோ 
சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts