Friday, 18 August 2017

குருட்டுக் குயவன்

No automatic alt text available.

பாதை தெரியாமல் பயணிக்கும் 
எழுத்துகளை, 
வழிகாட்டி அழைத்துச் செல்கிறது 
நொண்டிப் புறாவொன்று ... 
பயணிக்கும் வழியில்தான் 
அந்தக் குயவனின் வீடு 
கண்கள் இல்லாத அவன் , 
எழுத்துகளை வனைக்கின்றான்... 
குதிரையாக நினைத்து 
கழுதையாக உருவானது ... 
கழுதையின் மேல் பயணிக்கிறது , 
நொண்டிப் புறா... 
சகதியாற்றின் குறுக்கீட்டில் 
பயணம் வெள்ளான் துறையில் நிற்க 
காணாமல் போன கழுதை இதுதானென்று 
வெள்ளானொருவன் வீட்டிற்கு 
ஓட்டிச் செல்கிறான்... 
காணாமல் போன கழுதைக்காக 
காத்திருக்கிறது நொண்டிப் புறா ! 
பயணம் தெரியாத எழுத்துகளை 
நொண்டிப் புறாவிடம் கொண்டு சேருங்கள்... 
இந்தத் தடவை அது 
குதிரையாக வனைய படலாம்... 
குருட்டுக் குயவன் 
அங்கேயேதான் காத்திருக்கிறான் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts