Tuesday, 22 August 2017

ஊஞ்சலாட்டம்



ஊஞ்சலாடும் உணர்ச்சிக் கட்டிலில் 
உட்கார்ந்தாடும் பதுமை நான் ! 

ஆட்டுவிப்பவன் சிரிக்கின்றான், 
ஆடுகின்றவன் அழுகின்றேன் ! 

வேகமான ஆட்ட அசைவுகளில் 
வேகமாக மேலெழுகின்றேன் , 

பூமியின் இயற்கை விசையென்னை 
வேகமாகவே கீழே இழுக்கின்றது ! 

ஏற்ற இறக்கங்கள் இருந்தால்தான் 
ஊஞ்சலாட்டம் உறுதியாகுமாம் ! 

ஊஞ்சலின் வேகம் மெல்லக் குறைகின்றது , 
ஒன்று எழுந்து நிற்பேன் ! 

இல்லையென்றால் பிறர் நகைக்க 
கீழே சட்டென்று வீழ்வேன் ! 

ஊஞ்சலாடும் உணர்ச்சிக் கட்டிலில் 
உட்கார்ந்தாடும் பதுமை நான் ! 

உடையாமல் எழுவதும் ,வீழ்வதும் 
என் கைகளில் ஒன்றுமேயில்லை ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts