
என் செல்பேசிக்குள்
லட்சம் காதுகள்
முளைத்திருக்கின்றன ,
என் தனிமைகளை
நானே
திருடு கொடுக்கிறேன்,
எனது வங்கிக் கணக்கில்
எவனோ
பணம் எடுத்துப் போகிறான் ,
அம்முவிற்கும்
என் செல்பேசிதான்
விளையாட்டு மைதானம் ,
பார்வை
குறைவிற்குக் காரணம்
செல்பேசியாகவும் இருக்கலாம் ,
அப்படியொன்றும்
வயதாகவில்லை ,ஆனாலும்
காது கேட்பது சற்று மந்தம்தான்,
அப்பாவின் கடிதங்களை
பிரித்துப் படிக்கிறேன் ,
தாத்தாவின் பாசம்
வார்த்தைகளாய் வாழ்கின்றது ,
என் செல்பேசிக்கு
அப்படியொன்றும் வரலாறு
இருக்கப் போவதில்லை ,
'என்ன ம...க்கு
விஞ்ஞானம் வளர்ந்திருக்கு?'
என்று , இந்தக் கவிதையை
எழுதிதான் முடிப்பேன் ,
என் பேரன் சொல்லலாம்
இது
தாத்தாவின் கவிதையென்று !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment