Saturday, 12 August 2017

வசீகரனின் ஆடுகள்

No automatic alt text available.

ஆடுகளின் யுத்த களத்தில் 
இனவெறியின் இரத்தச் சகதிகள் , 
நரிகளின் நாட்டாமை 
சமாதானத்திற்கு அழைப்பு ! 

முடிவதாய் இருந்த பேச்சு வார்த்தையை 
முடியாமல் பார்த்துக் கொண்டது, 
ஓநாய் மந்திரி ! 

பேச்சு வார்த்தைகள் முடியும் வரை 
சிங்கங்கள்தான் சிறப்புக் காவல் ! 

காணாமல் போன ஆடுகளெல்லாம் 
தீவிரவாதிகளென்று 
சிறுத்தை யொன்று , செய்தி வாசிக்கிறது ! 

பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன, 
ஆடுகளுக்கு வக்காலத்தாய் 
கருஞ்சிறுத்தைகள் நியாயம் கேட்கின்றன ? 

சிங்கங்களின், சிறப்புக் காவலை யெதிர்த்து 
ஆடுகளின் எதிர்ப்புப் போராட்டம் , 

போராடும் ஆடுகளை 
புரட்டிக் கடித்த சிங்கங்களைப் பாராட்டி 
சிறப்பு விருந்து , ஆட்டுக் கறிகளோடு ! 

மேய்ப்பனைத் தேடுகின்றன ஆடுகள் ! 

நாட்டமை நரியின் ஆசனம், 
மேய்ப்பனின் எலும்புகளால் இழைத்திருப்பதை 
எப்படியறியும் இந்த ஆட்டு மந்தைகள் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts